இலக்கியத்தில், உருவாக்கும் படைப்பு என்பது வாசகனின் சிந்தனைக்கான ஒரு திறப்பாய், வாயிலாய் அமைய வேண்டும். அதன் தொடர்பான சாத்தியங்களை, வரலாறுகளை, நிகழ்வுகளை, தத்துவங்களை தேடி அவன் செல்ல வேண்டும்.
இக்கதையை வாசித்தபின், என் சிந்தனைகளை தொகுக்க முற்பட்டபோது, அது மூன்று வகையாக பிரிந்திருப்பதை உணர்ந்தேன்.
ஒன்று, கருப்பொருளின் சாத்தியம் மற்றும் அதன் தொடர்பான நிகழ்வுகள், தரவுகள் நோக்கிய என் பயணம்.
இரண்டு, கதைக்கொடுத்த மனித உணர்வுகள், கேள்விகள்
மூன்று, அந்த கேள்விகளின் வழியிலான ஒரு தத்துவ பயணம்
முதலாவதாக நான் சொன்னது, பொதுவாக யார் சென்று தேடினாலும் கிடைக்க கூடியவையே. அது இங்கு அவசியமல்ல.
இரண்டாவதான - மனித உணர்வுகளும், கேள்விகளும்
கதையில் ரேவன் என்ற மூத்த ஆராய்ச்சியாளர், தனது இளவலான ஆராய்ச்சியாளர் நிதன் உலகிற்கு தந்த தீர்வு, எதிர்காலத்தில் அல்லது நிகழ்காலத்தின் அதன் செயல்பாடு குறித்த தனது அனுமானங்களை,அல்லது தனக்கு உண்மையென்று தோன்றுபவையெ, ஒரு நிருபரின் வழியே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அந்த நிருபர், வாசகனுக்கான உருவகம். கதை போக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எவ்வித உணர்வுகளுக்கு ஆளாகிறோமோ அவையெல்லாம் அவன் வெளிக்காட்டுகிறான். அல்லது, அவன் வழியே அவ்வுணர்வுகளை நம் மூளையில் முடுக்கி விடுகிறார் என்று சொல்லலாம்.
கதையின் முடிவில்,
ரேவன் சொல்வது முற்றிலும் நம்பக்கூடியதா அல்லது அவரின் காழ்ப்புணரச்சியினால் சொல்லக்கூடியதா? என்ற கேள்வி எழுகிறது.
அதே சமயத்தில், சுருதி, அனுமானத்திற்கு பின் பிரத்யட்சம் இருக்கத்தானே செய்யும், அப்போது அவர் சொல்வதை நம்பாமல் இருக்க இயலவில்லை என்றும் தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.