செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

பஞ்சு திரி

 அப்பா வாங்கி தந்த பஞ்சு திரியில்

அப்பாவிற்கே அவள் விளக்கேற்றினாள்;

ஒளியின் நுனி தொட்டாள்;

“அம்மா, கதவ மூடிக்கோ நானும் அப்பாவும் கடைக்கு போயிட்டு வரோம்!” - என்று கிளம்பினாள்.

“சீக்கிரம் வந்திடுங்க பாப்பா கதவு திறந்தே இருக்கட்டும்”, என்றாள் அம்மா.

விளக்கின் ஒளி இன்னும் பிரகாசித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.