புதன், 19 மார்ச், 2025

தொடர்ச்சி


ஆற்று பாலத்தில் நின்றுகொண்டு

ஓடும் நீரில் அப்பாயிக்கு 

பொறி கலவை வீசினேன்;

அவன் அந்த கருப்பு வாகனத்தில்

என்னை பின்தொடர்ந்தான்..

நான் ஓட ஓட என்னை நெருங்கினான்

அவன் நெருங்க நெருங்க 

என்னை அடையா வண்ணம் 

நான் எட்டிச் சென்றேன்..

ஓரிடத்தில் நின்றுவிட்டேன்..

என் எதிரே மக்கள் திரள்; 

என் அருகே ஒரு பேருந்து; 

திரும்பி நின்றேன், என் எதிரே அவன்..

பத்தடி தூரம் இருவருக்கமிடையில்;

அவன் கண்களால் என்னை காண இயலவில்லை;

கத்தி அரற்றுகிறான், நான் அவனை நோக்குகிறேன்;

பேருந்து கிளம்ப ஆயத்தமாயிருந்தது! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.