ஆற்று பாலத்தில் நின்றுகொண்டு
ஓடும் நீரில் அப்பாயிக்கு
பொறி கலவை வீசினேன்;
அவன் அந்த கருப்பு வாகனத்தில்
என்னை பின்தொடர்ந்தான்..
நான் ஓட ஓட என்னை நெருங்கினான்
அவன் நெருங்க நெருங்க
என்னை அடையா வண்ணம்
நான் எட்டிச் சென்றேன்..
ஓரிடத்தில் நின்றுவிட்டேன்..
என் எதிரே மக்கள் திரள்;
என் அருகே ஒரு பேருந்து;
திரும்பி நின்றேன், என் எதிரே அவன்..
பத்தடி தூரம் இருவருக்கமிடையில்;
அவன் கண்களால் என்னை காண இயலவில்லை;
கத்தி அரற்றுகிறான், நான் அவனை நோக்குகிறேன்;
பேருந்து கிளம்ப ஆயத்தமாயிருந்தது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.