ஞாயிறு, 26 ஜனவரி, 2025

மரபிலக்கிய வகுப்பு (ஜனவரி 17,18,19) - அனுபவ வெண்பாக்கள்


விரிமலைகள் வாயில்முன் மாமகளி தழ்நகைக்க

நேர்விழி வானர் குலம்வழி - நிற்க

வளையெறும்பர் சீரமைத்து மண்மகளை சூழ

நித்யவன தாள்பணிந் தேன்


நெய்குருவி செம்பருந்தோ டுச்சேதி சேர்த்திட

சேய்பருந்தோ விண்மீன்கள் கைக்கோர்த்து - ஆய்ந்திட

வெள்ளி முளைவில்கூ தல்உரைக் கம்மண்

மரபுழ வன்எழுந் தார்


பாரதித்தொ டங்கி இருதா சனுடனல்கி

பாரதத் தில்லுருகி கம்பர்முன் - நற்றணுகி

அவ்வை கவியுடன் மென்னடை வந்துவந்து

காலனையே பந்தடித் தோம்


காளமேகத் திற்மிதந்து ரெட்டையரு டன்னகைத்து

பிள்ளைத் தமிழோடசைந்து காற்சிலம்பாழ்- நல்மணியாம்

மேகலையை கோர்த்தெடுத்து  நட்குறள றிந்தோம்

இயலிசைக்க டல்நனைந் தோம்


நறுக்கலையின் கொம்பனாய்அ டுக்களையின் வீரனாய்

நற்சுவையாறில் ஆவலாய் ஆரணியக் காவலாய்

எம்பசிநீக் கும்மிருவர் பல்சுவைக்கோ அங்கொருவர்

அந்தியூர் தந்த மணி


முப்பதெட்டு நாழிகைகள் ளாய்பாகாய் தாய்தமிழ்

அப்பாயு னைத்தொட்டு நின்முன்னே ஒப்படைத்து

சுட்டிடர்க ளைத்து உணர்வுகளால் கட்டுண்டு

கட்டவிழ் காற்றாயா னேன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.