தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை வாஞ்சையோடு நினைவு கூர்ந்திருக்கும் விதம், மலைமீது நடக்குபோது சினேகத்தோடு ஸ்பரிசிக்கும் மழைத்துளிகளை ஒத்தது.
சிறிய எளிய புத்தகம். நல்ல மொழிப்பெயர்ப்புடனும் ஒருசில எழுத்துப்பிழைகளுடனும் காணப்படுகிறது. 20 தலைப்புகளில் அளித்திருக்கும் அனுபவமும், தகவல்களும் நன்றாக இருந்தன. அவரின் முதல் ரசிகனை நினைவுக்கூர்ந்த விதமாக இருக்கட்டும், நள்ளிரவில் அவர் உதவி செய்து சம்பாதித்த பணமாக இருக்கட்டும், நண்பனை சந்திக்கும் இடமாக இருக்கட்டும், அனைத்துமே திரைக்கதை காட்சிகள் போல அல்லது Slow motion-ல் காட்டப்படும் Montage சாங் போலவும் கண்ணில் உலவுகின்றன.
அவர் மதத்தில் கூறியிருக்கும் ரமலான் பண்டிகை ஒட்டிய நாட்களில் கொண்டாடப்படும் விழாவும் என் மதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவும் ஒத்துப்போவது ஆச்சரியமாயிருந்தது. உடனே மனதில் தோன்றியது ஆசிரியர் ஜெ கூறும் வரி - ‘ஆச்சர்யம் என்பது அறியாமையின் ஒரு வெளிப்பாடு’.அதை ஒட்டிய தகவல்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.