அப்பா…
அவன்
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு நொடியும்
கண் நிறைந்து,
மனம் நிறைந்து,
எங்கும் எதிலும்
நீக்கமற நிறைந்து,
இந்த
அர்த்தமற்ற வாழ்வினை கடக்க
என் கைப்பிடித்து
வழி செய்கிறான்.
ஆம், அவன் இயற்கையோடு கலந்துவிட்டான் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்..
என் தலை நிமிர்ந்தால் வானமாய்..
என்னை தாங்கிப்பிடிக்கும் நிலமாய்..
என் சுவாசக் காற்றாய்..
என் உயிர் இன்னும்
உடலுடன் ஒட்டியிருக்கிறது
என்று நான் உணர
என் இரத்த ஓட்டமாய்
உடற்சூடாய்-நெருப்பாய்..
என் கண் ‘நீராய்’..
அவன்!
அவன் மட்டுமே
இயற்கையாய்
என்னை ஆட்கொள்கிறான்.
நான் என்னை
ஆசுவாசப்படுத்திக்கொள்ள
அனுதினமும் ஆயத்தமாகிறேன்..
இயற்கையாய் அவனை
பற்றிக்கொண்டு
இப்பயணத்தை தொடர்வதற்கு..
இப்பயணத்திற்கு முடிவுண்டு
அம்முடிவிலே நமக்கு நிறைவுண்டு
பாசத்திற்கு முடிவில்லை
என் வாழ்க்கை படத்தின்
இடைவேளையில் நான் மட்டும்.
இறுதியில்
அவன் வருவான்
தேர்க்கொண்டு
என்னை வான் ஏற்ற!!!
எவ்வாறு என் கழுத்தில்
நாண் ஏற
காத்திருந்தானோ,
அவ்வாறு
காத்திருப்பான்
எனக்காக!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.